1. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்’ என்ற பாடியவர்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிமணி
D) ராமலிங்கம் பிள்ளை
Answer:
B) பாரதிதாசன்
2. "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே" எனும் பாடல் வரிகள் யாருடையது?
A) பாரதியார்
B) கவிமணி
C) கண்ணதாசன்
D) நாமக்கல் கவிஞர்
Answer:
C) கண்ணதாசன்
3. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!" என்று யாரை வெண்ணெய் குயத்தியார் புகழ்ந்து பாடியுள்ளார்?
A) கரிகால் பெருவளத்தான்
B) கோப்பெருஞ்சோழன்
C) செங்குட்டுவன்
D) நெடுஞ்செழியன்
Answer:
A) கரிகால் பெருவளத்தான்
4. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீ ரோ" என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?
A) குறுந்தொகை
B) சிறும்பணாற்றுப்படை
C) புறநானூறு
D) நற்றிணை
Answer:
A) குறுந்தொகை
5. ‘தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்’ என்றவர்?
A) பாரதியார்
B) அம்பேத்கர்
C) பெரியார்
D) அண்ணா
Answer:
C) பெரியார்
6. பொருத்துக.
a) Tornado - 1. சூறாவளி
c) Tempest - 2. பெருங்காற்று
b) Storm - 3. புயல்
d) Whirlwind - 4. சுழல்காற்று
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 4 3 2 1
Answer:
A) 1 2 3 4
7. ‘வெற்றிவேற்கை’ நூலின் ஆசிரியர்?
A) பாரதிதாசனார்
B) பாரதியார்
C) அதிவீரமாபாண்டியர்
D) கண்ணதாசன்
Answer:
C) அதிவீரமாபாண்டியர்
8. "காலின் ஏழடிப் பின் சென்று" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?
A) பொருநராற்றுப்படை
B) பெரும்பாணாற்றுப்படை
C) சிறும்பணாற்றுப்படை
D) நற்றிணை
Answer:
A) பொருநராற்றுப்படை
9. ‘அரை வயிற்றுப் கஞ்சிக்குள்ளப்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன், என்ற கருத்து யாருடையது?
A) அண்ணா
B) பெரியார்
C) அம்பேத்கர்
D) பாரதியார்
Answer:
C) அம்பேத்கர்
10. "விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல" என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?
A) சிலப்பதிகாரம்
B) கம்பராமாயணம்
C) கலிங்கத்துபரணி
D) புறநானூறு
Answer:
C) கலிங்கத்துபரணி
11. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசு பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு?
A) 1988
B) 1976
C) 1990
D) 1890
Answer:
C) 1990